சீன வெளியுறவு துறை அமைச்சருடன் ஜெயசங்கர் ஆலோசனை.. ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

Recommended Video

    China Foreign Minister Wang Yi - ஐ சந்தித்த Jaishankar.. ஒரு மணி நேரம் நடந்த முக்கியமான மீட்டிங்

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த ஆண்டு முதலே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதிலும் கல்வான் மோதலுக்கு பிறகு நிலைமை மோசமானது.

    இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தை அதிகளவில் குவித்து வருகின்றனர். இந்நிலையில், தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடி இந்தியக் கிராமங்களுக்குச் சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

    இதனால் எல்லையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் சென்றுள்ளார்.

    ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்

    ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்

    அங்கு தான் அவர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இருவருக்கும் இடையே நடந்த இந்த மீட்டிங் சுமார் ஒரு மணி வரை நீட்டித்தது. மேலும், இரு நாட்டின் ராணுவ தளபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதையும் இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    அமைச்சர் ட்வீட்

    அமைச்சர் ட்வீட்

    இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் நடைபெறும் துஷான்பேவில் சீனா பாதுகாப்புத் துறை அமைச்சர் வாங் யி உடன் நடைபெற்ற ஒரு மணி நேரப் பேச்சுவார்த்தை முடிந்தது. இந்தியச் சீன எல்லையின் மேற்கு பகுதியில் நிலவி வரும் எல்லை பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என அவர் ட்வீட் செய்துள்ளார்.

    அமைதி தேவை

    அமைதி தேவை

    மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லையில் ஒருதலைபட்சமாக மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என எடுத்துரைக்கப்பட்டது. எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பது இரு நாட்டின் உறவுக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்று. மூத்த ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

    உடன்படிக்கை

    உடன்படிக்கை

    செப்டம்பர் 2020ஆண் ஆண்டு கடைசியாக இரு தலைவர்களும் மாஸ்கோவில் சந்தித்துப் பேசியதைக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், அப்போது எட்டப்பட்ட உடன்படிக்கையைப் பின்பற்றி, எல்லையில் இருக்கும் வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கிழக்கு லடாக்கின் எல்லையில் நடக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். பாங்கோங் ஏரி இருந்து சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    பதற்றம் தணியுமா

    பதற்றம் தணியுமா

    இந்த விஷயத்தில் சீனத் தரப்பு இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டுள்ளது என்றும் இருப்பினும் மற்ற பகுதிகளின் பதற்றமான நிலை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று ஜெய்சங்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடி இந்தியக் கிராமங்களுக்குச் சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+