இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
தற்போதைய நிகழ்வுகளின் வளர்ச்சி, இரு தரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடரும் கொவிட்-19 சவால்கள் உள்ளிட்ட விஷயங்களில் சம்பந்தப்பட்ட இருதரப்பு அதிகாரிகள் இடையே அவ்வப்போது தொடர்பை தொடர்ந்து மேற்கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அண்டை நாடு முதலில் என்ற இந்தியாவின் கொள்கையில் இலங்கையின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இவ்வாறு மத்திய பத்திரிகை தகவல் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications