நாட்டுக்கு உணவு தருபவர்களுக்கு ஆதரவு தருவது நமது கடமை - ராகுல்காந்தி
விவசாயிகளுக்கு, நாட்டுக்கு உணவளிப்பவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும் என்று ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்
டெல்லி: பீகார் விவசாயி எம்எஸ்பி-ஏபிஎம்சி இல்லாமல் பெரும் சிக்கலில் உள்ளனர், இப்போது பிரதமர் முழு நாட்டையும் இந்த கிணற்றில் தள்ளியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், விவசாயிகளுக்கு, நாட்டுக்கு உணவளிப்பவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும் என்று ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தலைநகர் டெல்லி கடும் குளிரையும் தாண்டி தகிக்கிறது.

தலைநகருக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். விவசாயிகளிடம் மத்திய அமைச்சர்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அவை அத்தனையும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், 3 கருப்பு வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்துசெய்வதற்கு குறைவான எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது, இந்தியாவுக்கும், விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம் என்று பதிவிட்டிருந்தார்.
வேளாண் சட்ட மசோதாக்களை கடுமையாக எதிர்க்கின்றனர் விவசாயிகள். குறைந்த பட்ச ஆதார கொள்முதல் இல்லாமல் போனதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பீகாரில் ஏற்கெனவே ஏபிஎம்சி முறை ஒழிக்கப்பட்டு 2006ஆம் மாற்று முறை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து குறைந்தபட்ச ஆதார விலை அளிக்க வேண்டிய விவசாய விளைபொருட்களை அரசு வாங்குவது கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டதுதான் நடந்தது.
கோட்பாட்டளவில் ஏபிஎம்சி முறையில் விவசாயப் பொருட்களை வர்த்தகர்கள் மண்டியில் ஏலம் எடுப்பார்கள், அதிகவிலை கொடுக்க முன்வருபவர்களுக்கு விற்கப்படும். ஆனால் தனியார் மண்டிகளில் இந்த முறை கிடையாது. பீகார் தனியார் மண்டிகளில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு மிகக்குறைந்த விலையே கொடுக்கப்பட்டது, அதுவும் சீசனுக்கு சீசன் கடுமையாக மாறும். உதாரணமாக பீகாரில் சோளத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,200 கடந்த ஆண்டு இருந்த விலை நடப்பு ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.1300 ஆகச் சரிந்தது.
இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, "பீகார் விவசாயி எம்எஸ்பி-ஏபிஎம்சி இல்லாமல் பெரும் சிக்கலில் உள்ளனர், இப்போது பிரதமர் முழு நாட்டையும் இந்த கிணற்றில் தள்ளியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், விவசாயிகளுக்கு, நாட்டுக்கு உணவளிப்பவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும்" என்று ட்வீட் செய்துள்ளார் .
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications