“கரூர் உயிரிழப்பு சம்பவம் பெரும் துயரம் தருக்கிறது” - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
டெல்லி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் தனது x பக்கத்தில், "தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் துரதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்பட்ட துயரச் செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி, "தமிழ்நாட்டின் கரூரில் அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் நான் துணை நிற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி, ஆங்காங்கே சிலர் மயக்கமடைய தொடங்கினர். இதனை அடுத்து விஜய் தண்ணீர் பாட்டில்களை தொண்டர்களை நோக்கி வீசியிருந்தார். அப்போதே பிரச்சாரத்தை நிறுத்தியிருந்தால் இந்த அளவுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்று பலரும் கூறுகின்றனர்.
நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மிக முக்கியமாக குழந்தைகள் பலரை காணவில்லை. எனவே அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
-
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications