தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டு.. மோடி பேச்சில் விதிமீறல் இல்லை.. தேர்தல் ஆணையம் விளக்கம்
டெல்லி: தீபாவளிக்கு வெடிக்கவா நாங்கள் அணுகுண்டை வைத்திருக்கிறோம் என பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதில் எந்த விதிமீறலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தபோது, பயங்கரவாத சம்பவங்களை செய்து வரும் பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் பேசுகையில், "பாகிஸ்தானின் அசசுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம். இந்தியா என்ன தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டு வைத்திருக்கிறது" என ஆக்ரோசமாக கூறினார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் சில இடங்களில் பிரதமர் மோடி வெறுப்பை உமிலும் வகையில் பேசியதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. ஆனால் இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இதேபோல் அமித்ஷா மீதான புகார் குறித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.

11 புகார்கள்
இதனால் காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. அப்போது சுஷ்மிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரதமர் மோடி மீது 11 புகார்கள் இருப்பதாக கூறினார்.

2 புகார்கள் விசாரிப்பு
இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடிக்கு எதிரான இரண்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இரண்டிலும் அவர் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

புகாரை விசாரிக்க கெடு
இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரை திங்கள்கிழமைக்குள் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்து வழக்கையும் அன்றைக்கு ஒத்திவைத்தது.

மோடி பேச்சு
இதையடுத்து ராஜஸ்தான் மாநிலததில் மோடி பேசிய அணுகுண்டு தொடர்பான பேச்சில் எந்த விதிமீறலும் இல்லை என தள்ளுபடி செய்துள்ளது. இன்னும் 8 புகார்கள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.அதன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications