கொரோனா 3வது அலை: ஆக்சிஜன் இருப்பு உற்பத்தி அதிகரிப்பு - மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் இருப்பு வைத்திருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்த போது மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை கொரோனா பரவலின் வேகம் தீவிரமடையும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாடு தயாராகி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் மத்திய அமைச்சர்களுடனான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர் என 77 அமைச்சர்கள் பங்கேற்றனர். காணொலி வாயிலாக இதில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூபாய் 23,000 ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலப்பிரிவு முதல் ஐசியூ வரை, ஆம்புலன்ஸ் வசதி, ஆக்சிஜன் சேமிப்பு ஆகிய அனைத்து வசதிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இன்று பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா பரவலை எதிர்க்கொள்ளவும் ஆக்சிஜன் தேவை, இருப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜனை இருப்பு வைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது போல மீண்டும் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications