ஆபத்தில் இந்திய ஜனநாயகம் என அதிகாரப் பசியில் விமர்சிக்கும் காங்கிரஸ்: மோடி பதிலடி
டெல்லி: இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக அதிகாரப் பசியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் ஏற்கனவே 4 கட்டங்களாக வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது. இன்னும் 3 கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரதமர் மோடி. முஸ்லிம்கள் வாக்கு வங்கிக்காகவே காங்கிரஸ் அத்தனையையும் செய்கிறது என்பது மோடியின் குற்றச்சாட்டு. பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் பேராபத்தில் சிக்கிவிட்டது என்பது காங்கிரஸின் விமர்சனம்
இந்த விமர்சனங்கள் தொடர்பாக இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி அளித்த பதில்: 2014-ம் ஆண்டு முதல் இன்னொரு கட்சி அதிகாரத்தில் இருப்பதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. அதிகாரப் பசியில் இருக்கிறது காங்கிரஸ். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை விவாதங்களுக்கு அழைத்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் புதிய எம்பிக்கள் பலரும் என்னிடம் வந்து 5 ஆண்டுகாலத்தை வீணாக்கிவிட்டோம் என புலம்பி இருக்கின்றனர். உங்கள் கட்சியின் இளம் எம்பிக்கள், முதல் முறை எம்பிக்களை ஒரு மணிநேரம் எங்களுடன் உரையாட விட்டுவிட்டு நீங்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடலாம் என எதிர்க்கட்சிகளிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினாலும் அதை எதிர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications