இன்று முதல் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள்..9 வந்தே பாரத் ரயில்கள்! எவ்வளவு நேரம் குறையும் தெரியுமா?
டெல்லி: நாட்டின் 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். இதனால் பெரும்பாலான வழித்தடங்களில் ரயில் பயண நேரம் கணிசமாக குறைகிறது.
நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும்
புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.
இன்று தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைகள்:
- உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ஜாம்நகர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
11 மாநிலங்கள்: ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இந்த 9 வந்தே பாரத் ரயில்கள் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.

பயண நேரம் குறைகிறது: வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கப்படும் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இந்த வழித்தடத்தில் தற்போதுள்ள அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது,
ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும்.
ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.5 மணி நேரம் வேகம்;
நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வழக்கமான பயண நேரத்தைக் காட்டிலும் 2 மணி நேரத்திற்கு முன்னதாக சென்றடையும்;
ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜாம்நகர் - அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம்;
உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் அரை மணி நேரம். வேகமாக செல்லும்.
வழிபாட்டு தலங்கள் இணைப்பு: ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி - மதுரை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய வழிபாட்டு நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் மற்றும் திருப்பதி யாத்திரை மையத்திற்கு சிறந்த இணைப்பை வழங்கும்.












Click it and Unblock the Notifications