அரசு திட்டங்கள் மூலம் லட்சாதிபதியான ஏழைகள்.. மக்களவையில் மோடி பேச்சு
டெல்லி: அரசு திட்டங்கள் மூலம் ஏழைகள் சொந்த வீடு கட்சி லட்சாதிபதியாகியுள்ளனர் என மக்களவையில் ஜனாபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற இரு சபைகளிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இத்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் காரமசாரமாக பேசினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசை மிக கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம்; இந்த கூட்டாட்சி கட்டமைப்பை பாஜக சீர்குலைக்கிறது. மாநிலங்களின் கலாசாரங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. பாஜகவால் தமிழகத்தை வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சி செய்யவே முடியாது என பேசியது பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் லோக்சபாவில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகள் லட்சாதிபதியாக உயர்ந்துள்ளனர். அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் வீடுகட்டி லட்சாதிபதியாக வாழ்கின்றனர். ஏழைத்தாய்கள் இலவச சமையல் எரிவாயு மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் சென்று சேருகிறது. பலர் இன்னும் 2014ஆம் ஆண்டிலேயே பின்தங்கியுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications