அரசு திட்டங்கள் மூலம் லட்சாதிபதியான ஏழைகள்.. மக்களவையில் மோடி பேச்சு
டெல்லி: அரசு திட்டங்கள் மூலம் ஏழைகள் சொந்த வீடு கட்சி லட்சாதிபதியாகியுள்ளனர் என மக்களவையில் ஜனாபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற இரு சபைகளிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இத்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் காரமசாரமாக பேசினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசை மிக கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம்; இந்த கூட்டாட்சி கட்டமைப்பை பாஜக சீர்குலைக்கிறது. மாநிலங்களின் கலாசாரங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. பாஜகவால் தமிழகத்தை வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சி செய்யவே முடியாது என பேசியது பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் லோக்சபாவில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகள் லட்சாதிபதியாக உயர்ந்துள்ளனர். அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் வீடுகட்டி லட்சாதிபதியாக வாழ்கின்றனர். ஏழைத்தாய்கள் இலவச சமையல் எரிவாயு மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் சென்று சேருகிறது. பலர் இன்னும் 2014ஆம் ஆண்டிலேயே பின்தங்கியுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications