Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புவனேஸ்வரில் கான்வாய் புடைசூழ பிரதமர் நரேந்திர மோடி சென்ற போது திடீரென வந்த ஆம்புலன்ஸ்.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: புவனேஸ்வரில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ இன்று நடந்தது. கான்வாய் புடைசூழ பிரதமர் நரேந்திர மோடி சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு பிரதமர் மோடி வழிவிட்டார். அவரது கன்வாய்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆம்புலன்சுக்கு வழிவிடுவது இது முதல்முறையல்ல.. ஏற்கனவே இதேபோல் ஒரு சில நேரங்களில் செய்திருக்கிறார்.

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி 6வது முறையாக இன்று வருகை தந்தார். இன்று நடந்த விழாவில் பிரதமர் மோடி ரூ.18,600 கோடி மதிப்பிலான 105 திட்டங்களை துவக்கி வைத்தார். சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலை மற்றும் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

PM Modi s convoy halted during a roadshow in Bhubaneswar to let an ambulance pass earning praise

மேலும் புவனேஸ்வரில் பயணிகள் ரயில் ஒன்றையும், புதிய ரயில் வழித்தடத்தையும் துவக்கி வைத்தார். தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களின்படி 100 மின்சார பேருந்துகளையும் பிரதமர் மோடி இன்று புவனேஸ்வரில் துவக்கி வைத்தார். மேலும் ஒடிசாவின் வளர்ச்சி குறித்து பாஜக அரசு தயாரித்துள்ள திட்டமிடுதல் ஆவணத்தையும் வெளியிட்டார்.

முன்னதாக புவனேஸ்வரில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ இன்று நடந்தது. கான்வாய் புடைசூழ பிரதமர் சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு பிரதமர் மோடி வழிவிட்டார். அவரது கன்வாய்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடும் வீடியோ வெளியாகி உள்ளது. அரசியல்வாதிகள் வருகைக்காக ஆம்புலன்சுகளை காக்க வைக்கும் நடவடிக்கைகள் ஆங்காங்கே நடப்பதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் பிரதமர் மோடி அந்த விஷயத்தில் எப்போதுமே கவனமாக இருக்கிறார்.

தனது கான்வாய் வரும் போது, ஆம்புலன்சுகள் வந்தால் கண்டிப்பாக வழிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். புவனேஸ்வரில் மட்டுமல்ல ஏற்கனேவே வேறு சில நகரங்களிலும் பிரதமர் மோடியின் கான்வாய் செல்லும் போது, ஆம்புலன்சுகள் அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மாநில முதல்வர்களும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். சில நேரங்களில் சில மாநிலங்களில் முதல்வர், கவர்னர் , ஜனாதிபதி வருகைக்காக ஆம்புலன்சுகள் காக்க வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடதக்ககது.

இதனிடையே புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜி7 மாநாட்டுக்காக கனடா சென்றிருந்தேன். அங்கு என்னை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா வந்துள்ளீர்கள். வாஷிங்டன் வழியாக அமெரிக்கா வந்து திரும்புமாறு கூறினார். விருந்து மற்றும் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நான் அமெரிக்க அதிபரிடம், உங்கள் அழைப்புக்கு நன்றி. புனிதமான ஜெகநாதரின் நிலத்திற்கு (ஒடிசா) வர வேண்டும் என்ற காரணத்திற்காக டிரம்ப்பின் அழைப்பை பணிவாக மறுத்தேன். உங்களின் அன்பும், ஜெகநாதர் மீதான பக்தியுமே என்னை இந்த மண்ணிற்கு வரவழைத்துள்ளது" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+