ஆட்சிக்கு வந்ததும்.. மாநிலங்களின் நிதியை குறைக்க முயன்ற மோடி.. பிரபல அல் ஜசீரா ஊடகம் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2014ல் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுக்க மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிதியை வெகுவாக குறைக்க பிரதமர் மோடி திட்டமிட்டதாக பிரபல அல் ஜசீரா ஊடகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

நாட்டின் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க பிரதமர் மோடி இந்திய நிதி ஆணையமான நிதி ஆயோக் உடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்று அந்த ஊடகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

PM Narendra Modi tried to bring down the state funds after 2014 says Aljazeera report

பட்ஜெட் தாக்கலுக்கு 2 நாட்களுக்கு முன்: ஆனாலும் இந்திய நிதி ஆணையம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசுக்கான வரி பங்கீட்டை குறைப்பது சரியாக இருக்காது என்று எதிர்த்து உள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி மோடி பின்வாங்கும் நிலை ஏற்பட்டது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வந்ததும்.. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் இந்த ஆலோசனையை ரகசியமாக மேற்கொண்டு உள்ளார். நாட்டின் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று அவர் கூறியதை கேட்டு.. நிதி ஆயோக் அதை கடுமையாக எதிர்த்து உள்ளது.

வேறு வழியின்றி கடைசியில்.. பட்ஜெட்டை மொத்தமாக மாற்றி உள்ளனர். அதாவது பட்ஜெட் தாக்கல் செய்யும் 2 நாட்களுக்கு முன் அவசர அவசரமாக மொத்த பட்ஜெட்டையும் வேறு வழியின்றி மாற்றி உள்ளனர். முதலில் உருவாக்கப்பட்ட பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு மிக குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது.

அதே நேரத்தில், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி குறித்த நிதி ஆயோக் பரிந்துரைகளை வரவேற்பதாக நாடாளுமன்றத்தில் மோடி பொய் பேசி உள்ளார். அதாவது மறைமுகமாக நிதி ஒதுக்குவதை எதிர்த்துவிட்டு நாடாளுமன்றத்தில் அதை வரவேற்பது போல பேசினார்.

குற்றச்சாட்டு வைத்தது யார்?: முக்கியமாக் மோடி மீதான இந்த குற்றச்சாட்டுகளை வைத்ததே நிதி ஆயோக் சிஇஓ பி வி ஆர் சுப்பிரமணியம்தான் என்று அந்த ஊடகம் செய்தியில் கூறியுள்ளது. நிதி ஆயோக் சிஇஓ பி வி ஆர் சுப்பிரமணியம்தான்.. மோடி 2014ல் நடத்திய மறைமுக பேச்சுவார்த்தை, அதில் நிதியை குறைக்க திட்டமிட்டது போன்ற செயல்களை செய்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

மோடிக்கும், நிதி ஆயோக் தலைவர் ரெட்டிக்கும் இடையில் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ததே தான்தான் என்று பி வி ஆர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

முதல்முறை இப்படி: அதோடு தற்போதைய மத்திய பாஜக அரசாங்கத்தில் உள்ள ஒரு உயர்மட்ட அரசு அதிகாரி பகிரங்கமாக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பது இதுவே முதல்முறை. அரசுக்கு எதிராக இப்படி நேரடியாக.. அதுவும் மோடிக்கு எதிராக பேசுவது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது, பிரதமரும் அவரது குழுவும் தொடக்கத்தில் இருந்தே மாநிலங்களின் நிதியைக் குறைக்க முயன்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

பி வி ஆர் சுப்பிரமணியம் மோடியின் குட் புக்கில் இருந்தவர் என்று அறியப்படும் நேரத்தில் மோடிக்கு எதிராக பி வி ஆர் சுப்பிரமணியமே புகார் வைப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியாவின் மத்திய பட்ஜெட்டில் பல விஷயங்களை மறைக்கின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெளியே வந்தால் வேறு மாதிரி இருக்கும். அதை எல்லாம் கண்டுபிடிக்க ஹிண்டன்பேர்க் போன்ற நிறுவனங்கள்தான் பட்ஜெட்டை ஆடிட் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். அதாவது பட்ஜெட் கணக்குகளின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பும் விதமாக அவர் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மாநிலங்களின் நிதியை மத்திய அரசு குறைகிறது என்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் புகார் வைக்கும் நிலையில்தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+