மாம்பழம் சின்னம் முடங்கும்.. அன்புமணியை EC அங்கீகரிக்கவில்லை.. ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்
டெல்லி: அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் டெல்லியில் கூறியுள்ளார். பாமக தலைவராக ஸ்ரீகாந்தி தேர்வான போதே அன்புமணி பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது எனவும், தேர்தல் ஆணையத்திடமே அன்புமணி தரப்பு பொய் பேசுகின்றனர் என்றும் அருள் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு நெருங்கும் சூழலில், பாமகவில் தந்தை - மகன் மோதல் முடிவுக்கு வந்தபாடில்லை. அதிமுக - பாஜக கூட்டணிக்கு சென்றுள்ள அன்புமணி தரப்பிற்கே தேர்தல் ஆணையமும் கட்சி, சின்னத்தை அங்கீகரித்துள்ளது.

இதனை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
அன்புமணிக்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும் என்றும், தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணிதான் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை பதிவு செய்த நீதிமன்றம் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் பாமகவில் மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும், அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் டெல்லியில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்திடமே அன்புமணி தரப்பு பொய் பேசுகின்றனர்.
அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. பாமக தலைவராக ஸ்ரீகாந்தி தேர்வான போதே அன்புமணி பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது. எனவே விரைவில் மாம்பழம் சின்னமும் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications