Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியா” கூட்டணிக்கு “ஜீரோ” நிதிஷ்குமார் “ஒருங்கிணைப்பாளர்”? டார் டாராக வெளுத்த பிரசாந்த் கிஷோர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் இதனை கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பாகி இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் உட்பட மொத்தம் 26 கட்சிகள் தற்போது வரை இடம்பெற்றுள்ள்ன. பீகார் தலைநகர் பாட்னா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில் "இந்தியா" கூட்டணி கூட்டங்கள் நடைபெற்றன. பெங்களூர் கூட்டத்தில்தான் "இந்தியா" கூட்டணி என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

Prashant Kishor dares Nitish Kumar to elect as convener of I.N.D.I.A

இதனைத் தொடர்ந்து "இந்தியா" கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நாளையும் நாளை மறுநாளும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற உள்ளது. மும்பை "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதேபோல "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டத்தில் நாளை அணியின் லோகோ- சின்னமும் கொள்கை முழக்கமும் வெளியிடப்பட உள்ளது. மேலும் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிக்கப்படலாம் என்கிற தகவலும் வலம் வருகிறது.

அத்துடன் "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற விவாதமும் நாளைய கூட்டத்தில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தி; ஜேடியூவைப் பொறுத்தவரையில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவதால் பெரும் குழப்பமும் உருவாகி உள்ளது.

இதனிடையே "இந்தியா" கூட்டணி கூட்டம் குறித்து தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. சொந்த மாநிலத்தில் எந்த ஆதரவும் இல்லாதவர் நிதிஷ்குமார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி, தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குறைந்தபட்சம் 20,25 எம்.பிக்களை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள். ஆனால் நிதிஷ்குமார் நிலைமை அப்படி இல்லை. எந்த பலமுமே இல்லாத நிதிஷ்குமாரை "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்தால் எப்படி சரியாக வரும்?. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+