Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மோடி அரசில் சீக்கியர்கள் இனப்படுகொலை"- டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் "ஸ்லீப்பர் செல்கள்" சேட்டை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் எழுதி வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் சீக்கியர் வாழும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் எனும் தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக 1980களில் ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. பிந்தரன்வாலே தலைமையிலான இந்த ஆயுதப் போராட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அழித்தொழித்தார்.

Pro-Khalistan slogans written on Delhi Metro Stations Wall

பஞ்சாப் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலையே பிந்தரன் வாலே தலைமையிலான காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களது தலைமையகமாக கொண்டு செயல்பட்டனர். இதனால் பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து பிந்தரன்வாலே உள்ளிட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடி அழித்தது. இதற்காகவே பிரதமர் இந்திரா காந்தி 1984-ல் சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் தேடித் தேடி இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மீதான வழக்குகள் இப்போதும் நடைபெற்று வருகின்றன.

1990கள் வரை பஞ்சாப் மாநிலத்தை பற்றி எரிய வைத்த இந்த காலிஸ்தான் பயங்கரவாத முழக்கம் தணிந்து போனது. வெளிநாடுகளுக்கு தப்பிப் போன காலிஸ்தான் பயங்கரவாதிகள் சமீப காலமாக தங்களது கோரமுகத்தை காட்டி வருகின்றனர். டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டத்துக்குள் ஊடுருவி டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் பயங்கரவாத இயக்க கொடி ஏற்றியது நாட்டை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. அத்துடன் பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் காலிஸ்தான் கொடியை பறக்க விடுவது, காலிஸ்தான் முழக்கங்களை எழுதி வைப்பது, காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை ஒட்டுவது என ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து பயங்கரவாத செயல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் இன்று 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் , காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் ஸ்லீப்பர் செல்கள், அந்த இயக்கத்தை ஆதரித்து முழக்கங்களை எழுதி வைத்தனர். அதில், மோடி அரசு சீக்கியர்களை இனப்படுகொலை செய்கிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. காலிஸ்தான் வாழ்க என்கிற முழக்கமும் அதில் இடம் பெற்றிருந்தது. இந்த வாசகங்களை போலீசார் விரைந்து சென்று அழித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+