நபிகள் நாயகம் குறித்து அவதூறு- இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் - அல்கொய்தா மிரட்டல்
டெல்லி: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் அவதூறாக பேசிய விவகாரத்துக்காக இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி. மற்றும் குஜராத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
டிவி விவாதம், சமூக வலைதளங்களில் பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியும் பதிவிட்டும் இருந்தனர். இந்த விவகாரம் இப்போது சர்வதேச பிரச்சனையாக வெடித்துள்ளது. ஈரான், ஈராக் உட்பட வளைகுடா நாடுகள், இஸ்லாமிய நாடுகள் பலவும் மத்திய அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. மதவெறி கொண்ட தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானும் மத்திய அரசை விமர்சித்திருக்கிறது.
Recommended Video

இத்தகைய எதிர்ப்புகளால் நுபுர் சர்மாவை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் நவீன் ஜிண்டாலை பாஜகவில் இருந்து நீக்கியும் அக்கட்சி மேலிடம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனாலும் இந்த பிரச்சனை ஓயவில்லை. மத்திய அரசு மீதான விமர்சனங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்தும் பதில் தந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நபிகள் நாயகம் குறித்த அவதூறுகளுக்காக இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. அல்கொய்தாவின் பெயரில் ஜூன் 6-ந் தேதியிட்ட மிரட்டல் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: நபிகள் நாயகத்தின் மரியாதையை காப்பாற்றுவதற்கான யுத்தம் நடத்துவோம்.டெல்லி, மும்பை, உ.பி. குஜராத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்பதை காவிரி பயங்கரவாதிகள் அறிந்து கொள்ளட்டும் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications