நபிகள் நாயகம் குறித்து அவதூறு- இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் - அல்கொய்தா மிரட்டல்
டெல்லி: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் அவதூறாக பேசிய விவகாரத்துக்காக இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி. மற்றும் குஜராத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
டிவி விவாதம், சமூக வலைதளங்களில் பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியும் பதிவிட்டும் இருந்தனர். இந்த விவகாரம் இப்போது சர்வதேச பிரச்சனையாக வெடித்துள்ளது. ஈரான், ஈராக் உட்பட வளைகுடா நாடுகள், இஸ்லாமிய நாடுகள் பலவும் மத்திய அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. மதவெறி கொண்ட தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானும் மத்திய அரசை விமர்சித்திருக்கிறது.
Recommended Video

இத்தகைய எதிர்ப்புகளால் நுபுர் சர்மாவை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் நவீன் ஜிண்டாலை பாஜகவில் இருந்து நீக்கியும் அக்கட்சி மேலிடம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனாலும் இந்த பிரச்சனை ஓயவில்லை. மத்திய அரசு மீதான விமர்சனங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்தும் பதில் தந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நபிகள் நாயகம் குறித்த அவதூறுகளுக்காக இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. அல்கொய்தாவின் பெயரில் ஜூன் 6-ந் தேதியிட்ட மிரட்டல் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: நபிகள் நாயகத்தின் மரியாதையை காப்பாற்றுவதற்கான யுத்தம் நடத்துவோம்.டெல்லி, மும்பை, உ.பி. குஜராத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்பதை காவிரி பயங்கரவாதிகள் அறிந்து கொள்ளட்டும் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications