சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுங்க - இந்தியாவுக்கு வங்கதேச அமைச்சர் அட்வைஸ்
டெல்லி: சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கதேச கல்வி அமைச்சர் திபு மோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா பவுண்டேசன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்தியா ஐடியாஸ் கான்கிலேவ் என்ற நிகழ்ச்சியில் பல மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வில் வங்கதேசத்தின் கல்வி அமைப்பு திபு மோனி கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார். அதில், "இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை அளிக்க இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையின மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். அனைத்து நாட்டவர்களுக்கும் இது பொருந்தும். உலகளவில் மதிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்க, அதன் நிறுவன தந்தைகளால் அரசியலமைப்பில் கூறப்பட்டு இருக்கும் கனவுகளை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்திய குடிமக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதுடன் உத்திரவாதம் அளிக்க வேண்டும். தனது குடிமக்களின் திறனை இந்தியா ஊக்குவிக்கலாம். பட்டியல் சாதியினர், பழங்குடியின மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சமூகத்தின் அனைத்து வகையான மக்களுக்கு அவரவர் உரிமைகளை வழங்க வேண்டும்.
மத சுதந்திரம் மற்றும் மத விவகாரங்கள் குறித்த அரசியலமைப்பின் விதிகளை எந்த விதமான சார்பு நிலையும் இன்றி நடுநிலையாக செயல்படுத்தினால் மத நல்லிணக்கம் வலுப்படும். அதன்மூலம் அமைதியை நிலைநாட்டலாம்." என்றார்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.!












Click it and Unblock the Notifications