ரபேல்.. ஊழல் வழக்கில் உளவு ரகசியங்கள் கூட விசாரிப்போம்.. மத்திய அரசுக்கு நீதிபதிகள் விளாசல்!
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் அது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் எந்த ஆதாரங்களையும் விசாரிப்போம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் அது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் எந்த வித ஆதாரங்களையும் விசாரிப்போம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ரபேல் வழக்கில் இன்று காரசார விவாதம் நடந்தது. மத்திய அரசுக்கு எதிராக ரபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் ஆதாரங்களை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தது. அது திருடப்பட்ட ஆவணங்கள் என்று வாதம் செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , நீதிபதிகள் கே.எம் ஜோசப், எஸ்.கே கவுல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

என்ன விசாரணை
இன்று நடந்த விசாரணையில் மத்திய அரசு கடுமையான வாதங்களை வைத்தது. மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், நாங்கள் தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில் சிறிய தவறு இருக்கிறது. சிஏஜி அறிக்கையில் முதல் மூன்று பக்கங்கள் விடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அந்த பக்கங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும், என்று கூறினார்.

ரபேல் திருட்டு
அதன்பின் கேகே வேணுகோபால், ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது. அனுமதி இல்லாமல் தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரபேல் ஆவணங்களை நீதிமன்றம் ஆதாரங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், என்று கூறினார்.

நீதிபதிகள் மறுப்பு
ஆனால் அதை மறுத்த நீதிபதி ஜோசப், ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் எந்த ஆவணங்களையும் நீதிமன்றம் விசாரிக்க முடியும். திருடப்பட்ட ஆவணங்களாக இருந்தாலும் நீதிமன்றம் விசாரிக்க முடியும். தேசிய பாதுகாப்பு, ராணுவ ரகசியம் குறித்த ஆவணங்களையும் விசாரிக்க முடியும்.

தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதற்கு இடம் இருகிறது. தேசிய பாதுகாப்பு, ராணுவ ரகசியம் ஆகியவற்றை கூட, ஊழல் வழக்கு என்னும்பட்சத்தில் நீதிமன்றம் விசாரிக்க முடியும் என்று கூறினார். இதற்கான ஆவணங்களை, மத்திய அரசின் விதிமுறைகளை நீதிபதி ஜோசப் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் அளித்தார். இதனால் மத்திய அரசுக்கு இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications