பண மதிப்பிழப்புதான்...இந்தியப் பொருளாதாரம்...சரியக் காரணம்...ராகுல் காந்தி விளாசல்!!
டெல்லி: நாட்டில் 2016 ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் மீது மிகவும் மோசமாக பிரதிபலித்துள்ளது. இதனால், ஏழைகள், விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
கடந்த 2016ஆம் ஆண்டில் மோடி அரசு பண மதிப்பிழப்பு செய்த காரணத்தால் தான் இன்று இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி இந்தியில் தனது வீடியோவை ட்வீட் செய்துள்ளார். மேலும், பணம் இல்லாத இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று கூறுவதெல்லாம், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய வணிகர்கள் இல்லாத இந்தியாவாக மாற்றுவதற்கான திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கும் இரண்டாவது வீடியோவில், ''நடப்பாண்டின் ஆகஸ்ட் 31ஆம் தேதி நாம் அடைந்து இருக்கும் மோசமான பொருளாதாரத்திற்கு 2016, நவம்பர் 8ஆம் தேதி பகடை உருட்டப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதற்கான மறைமுக காரணமே, கார்பரேட் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்து, அமைப்புசாரா நிறுவனங்களிடம் இருந்து பணத்தை எடுப்பதுதான். 2016, நவம்பர் 8ஆம் தேதி, இரவு 8 மணிக்கு ரூபாய் நோட்டுக்களை மோடி தடை செய்தார். இதையடுத்து வங்கிகளில் நமது மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
கருப்பு பணம் ஒழிக்கிறோம் என்று மோடி அரசு கூறியது யாருக்காக? இதனால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பலனும் ஏற்படவில்லை. பயன் அடைந்தவர்கள் எல்லாம் தொழிலதிபர்கள்தான். அமைப்புசாரா தொழில் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி பெரிய நிறுவனங்களுக்கு உதவுவதுதான் மோடி அரசாங்கத்தின் குறிக்கோளாக இருந்துள்ளது. பணம் இல்லாத நாடாக பார்க்க வேண்டும் என்று மோடி கூறினார். அதன் அர்த்தமே, அமைப்புசாரா நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதுதான்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ராகுல் காந்தி முதல் வீடியோவை வெளியிட்டு இருந்தார் அந்த வீடியோவில், கடந்த ஆறு ஆண்டுகால அமைப்புசாரா நிறுவனங்களின் பாதிப்பு, சரக்கு சேவை வரி, பண மதிப்பிழப்பு, பொது முடக்கத்தால் அமைப்புசாரா தொழில் நிறுவனங்களின் பாதிப்பு ஆகியவை குறித்து பேசி இருந்தார்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications