சஸ்பென்ஸ் ஓவர்.. மீண்டும் வயநாடு தொகுதியை டிக் அடித்த ராகுல் காந்தி.. அமேதி என்னாச்சு? பரபர பின்னணி!
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் முதற்கட்டமாக 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் களம் இறங்குகிறார். அமேதி லோக்சபா தொகுதியை அவர் தேர்வு செய்யாமல் வயநாடை செலக்ட் செய்ததன் பின்னணி என்னவென்று இங்கே பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த வாரம் மத்தியில் ஆளும் பாஜக 195 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன.

அதேபோல், அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இராணி போட்டியிடுவார் என்றும் பாஜக அறிவித்தது. பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னமும் முழுமை அடையாத நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலை அளித்து நெருக்கடி கொடுக்க திட்டமிட்டது.
இதனால், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டு வருகிறது. அதன்படி தான் இன்று 39 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
தற்போது வயநாடு தொகுதி எம்பியாக இருக்கும் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிட இருப்பதாக பேச்சு எழுந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, பாஜகவின் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார். வயநாடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி செல்வாக்கு மிகுந்த தொகுதியாக உள்ளது.
இதனால், safe Zone என்ற அடிப்படையில் ராகுல் காந்தி முதலில் வயநாடு தொகுதிக்கு டிக் அடித்ததாக தெரிகிறது. எனினும், 2-வது தொகுதியாக அமேதியிலும் ராகுல் காந்தி போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. ராகுல் காந்தி அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்ததில் இருந்து அதாவது 2004 முதல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்தார். மூன்று முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தோல்வியை தழுவினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications