எனது தந்தை விசாலமான பார்வை கொண்டவர்... அவர் இன்று இல்லை... ராகுல் காந்தி வருத்தம்!!
டெல்லி: '''மிகப்பெரிய விசாலமான பார்வை கொண்டிருந்தவர் எனது தந்தை. அவரை இன்று நாம் இழந்து இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இழந்து வருகிறோம்'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தந்தையின் 76வது பிறந்த நாளில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவரை நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி முதல் காங்கிரஸ் தலைவர்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ''ராஜீவ் காந்தி ஒரு மகத்தான பார்வை கொண்ட மனிதர், அவரது காலத்திக்ரு முன்பாகவே தீர்க்கமாக எதிர்காலம் குறித்து அறிந்து செயல்பட்டவர். இவற்றுக்கு எல்லாம் மேலாக அவர் ஒரு இரக்கமுள்ள, அன்பான மனிதர். அவரை தந்தையாக நான் பெற்று இருப்பதை அதிருஷ்டமாக கருதுகிறேன். அவரை இன்று நாம் இழந்து இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இழந்து வருகிறோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video
டெல்லியில் இருக்கும் ராஜீவ் காந்தியின் வீர் பூமியில் இன்று ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். வீர் பூமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ''மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

தனது தாயும், பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் நாட்டின் பிரதமராக ராஜீவ் காந்தி 1984ஆம் ஆண்டில் பதவியேற்றார். அந்த ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டு இறந்தார். தனது 40வது வயதில் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்று இருந்தார். ராஜீவ் காந்தி 1944 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தார். விடுதலைப் புலிகளால் இவர் 1991, மே 21ஆம் தேதி சென்னை அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். இவர் உயிரிழந்த தினமும் தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications