Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி எப்படி குப்பையா ஆக்குறீங்கன்னு பார்க்கலாம்.. வந்தே பாரத் ரயிலில் புது முயற்சி.. ரயில்வே அதிரடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வந்தே பாரத் ரயிலில் பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை அப்படியே வீசி சென்றதில் ரயில் பெட்டி முழுவதும் குப்பைகள் சிதறிக்கிடந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதி கொண்ட ரயில்களில் கூட பயணிகள் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு முடிவு கட்ட புதிய முயற்சியை ரயில்வே எடுத்துள்ளது.

இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டில் பெருமளவு மக்கள் தங்களின் தொலை தூர பயணங்களுக்கு ரயில்களை மட்டுமே நம்பியிருப்பதால், பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு வசதிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மலிவான கட்டணம் மட்டும் இன்றி பாதுகாப்பான பயணமும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணத்தை பெரிதும் விரும்புகின்றனர்.

8 வந்தே பாரத் ரயில்கள்

8 வந்தே பாரத் ரயில்கள்

பயணிகளை மேலும் கவரும் வகையில் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா, குஜராத் மாநிலம் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை, விசாகப்பட்டினம் - செகந்திராபாத் உள்பட 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயிலின் உள்புறம், வெளிப்புற தோற்றம்

ரயிலின் உள்புறம், வெளிப்புற தோற்றம்

பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் உள்ள வந்தே பாரத் ரயிலின் உள்புறம் மற்றும் வெளிப்புற தோற்றமும் ஆடம்பரமாக மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ரயில் பெட்டிகளுக்குள் பயணிகள் தாங்கள் உபயோகப்படுத்திய பொருட்களை அப்படியே வீசி சென்றது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

குப்பைகளாக காட்சியளித்த ரயில் பெட்டிகள்

குப்பைகளாக காட்சியளித்த ரயில் பெட்டிகள்

காலி வாட்டர் பாட்டில்கள், சாப்பிட்டு விட்டு வீசப்பட்ட காலி உணவு பொட்டலங்கள், பிளஸ்டிக் கேரி பேக்குகள் என பெட்டியில் குப்பைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின. வந்தே பாரத் ரயில் பயணிகளின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். விமானத்திற்கு இணையான சொகுசு வசதிகளை வழங்கும் வந்தே பாரத் ரயிலை தூய்மையாக பராமரிக்க பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ரயில்வே ஊழியர்கள் வைக்கும் கோரிக்கையாக இருந்தது.

விமானங்களில் பின்பற்றப்படும் நடைமுறை

விமானங்களில் பின்பற்றப்படும் நடைமுறை

இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலில் குப்பைகளை மாற்று வழியில் அகற்றுவதற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி விமானங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை போல பயணிகளின் இருக்கைக்கே வந்து காலி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை ரயில்வே ஊழியர்கள் வந்து சேகரிக்கும் வகையில் புதிய முயற்சியை ரயில்வே கொண்டு வந்துள்ளது. ரயில்வேயின் இந்த புதிய முயசிக்கு பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+