டெல்லி செங்கோட்டை தாக்குதல் தீவிரவாதி முகமது ஆரிப் தூக்கு தண்டனை உறுதி- சீராய்வு மனு டிஸ்மிஸ்!
டெல்லி: நாட்டை அதிரவைத்த டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது ஆரிப் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனால் தீவிரவாதி முகமது ஆரிப் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு டிசமப்ர் 22-ந் தேதியன்று இரவு 9 மணியளவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் டெல்லி செங்கோட்டைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்புக்காக நின்ற ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர்; பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து லஷ்கர் தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த வழக்கில் 2005-ம் ஆண்டு முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனைய 2007-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முகமது ஆரிப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 2011-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
பின்னர் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை முகமது ஆரிப் தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. பின்னர் முகமது ஆரிப்பின் சீராய்வு மனுவை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் டிஸ்மிஸ் செய்தது. இதனால் முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications