தீபாவளி.. சட்டென நிஜாமுத்தீன் தர்கா சென்ற ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்! மதவெறி, மதமாற்றம் கூடாதாம்
டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் அமைந்து இருக்கும் புகழ்பெற்ற ஹஜ்ரத் நிஜாமுத்தீன் தர்காவுக்கு சென்ற ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமாருக்கு தலையில் தலைப்பாகை கட்டி இஸ்லாமியர்கள் மரியாதை கொடுத்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமிய பிரிவான ராஷ்டிரிய முஸ்லிம் மஞ்ச் அமைப்பின் வாயிலாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தொடர்ந்து இஸ்லாமிய தலைவர்கள், ஆளுமைகளை அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அலிகார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் உத்தின் ஷா, முன்னாள் எம்.பி ஷாகித் சித்திக் மற்றும் தொழில் அதிபர் சையத் ஷீர்வானி ஆகியோரையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசியிருந்தார்.

மோகன் பகவத்
இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் மூத்த இஸ்லாமிய மதகுருவான அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியை மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், பாஜகவின் முன்னாள் அமைப்புச் செயலாளரான ராம் லால் ஆகியோர் சந்தித்துப் பேசினார்.

நிஜாமுத்தீன் தர்கா
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற ஹஜ்ரத் நிஜாமுத்தீன் தர்காவுக்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் சென்றுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்காவுக்கு சென்ற அவர் விளக்குகளை ஏற்றி மரியாதை செலுத்தினார். அத்துடன் அங்கிருந்த மதகுருமார்களுக்கு பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கினார்.

இந்திரேஷ் குமார் விளக்கம்
இதுகுறித்து பேசிய இந்திரேஷ் குமார், "தீபாவளி பண்டிகை மத வேற்றுமை, பிராந்திய வேற்றுமைகளை அழிக்கும். இந்தியா கொண்டாட்டங்கள், யாத்திரைகளின் பூமி. அனைவரும் ஏழைகளுக்கு உதவுவது, சகோதரத்துவத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு மதவெறி, தீங்கு, வெறுப்பு, கலவரம், போர் வேண்டாம் என நமக்கு போதிக்கிறது.

மதமாற்றம் கூடாது
நமக்கு அமைதியும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் வேண்டும். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்து வன்முறையை தூண்டக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் மதங்களையும், சாதியையும் பின்பற்ற வேண்டும். மற்ற மதங்களை இழிவுபடுத்தக்கூடாது. அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டால் இங்கு இந்தியாவில் அடிப்படைவாதிகளுக்கு இடம் இருக்காது. மற்ற மதங்களை மதிக்கும் நாடு இந்தியா." என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications