சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டம் என்னவாகும்?இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: சென்னை- சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
சென்னை- சேலம் இடையே ரூ10,000 கோடி மதிப்பீட்டில் 8 வழி சாலை திட்டம் அமைக்கப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.

ஹைகோர்ட்டில் வழக்கு
ஆனால் இந்த 8 வழி சாலை திட்டத்தால் விளை நிலங்கள், நீர்நிலைகள், மலைகள் அழிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

ஹைகோர்ட் தடை
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதியன்று 8 வழிசாலை திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கை நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. கடந்த அக்டோபர் 2-ந் தேதி இந்த வழக்கு விசாரணையில் எதிர்மனுதாரர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களையும் இதற்கு மத்திய அரசு விளக்கத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து 8 வழிசாலை திட்டம் தொடருமா? இல்லையா? என்பது தெரியவரும்.
-
தமிழகத்தில் ஏன் கள் விற்கக் கூடாது? டாஸ்மாக்கில் மது விற்கிறீர்களே? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications