சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பாடம் ஆகும் சீதாராம் யெச்சூரி.. உடலை தானம் செய்த குடும்பத்தினர்!
டெல்லி: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் தானம் செய்யப்படுகிறது. சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அவரது குடும்பத்தினர் தானமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72), சில நாட்களுக்கு முன்பு சுவாச தொற்று பிரச்சனையால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்ந்த சீதாராம் யெச்சூரிக்கு உடல்நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சீதாராம் யெச்சூரிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செயற்கை சுவாச உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு பொதுவுடமை இயக்கத் தலைவர்களையும், தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள், பிற கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1952ல் சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட யெச்சூரி, ஆந்திரா, டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதைத்தொடர்ந்து டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்தார். அந்த காலகட்டத்தில் மாணவர் தலைவராக விளங்கினார்.
1975 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சீதாராம் யெச்சூரி, எமர்ஜென்சி காலகட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து கைதானார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 வரை ராஜ்யசபா எம்.பி யாக பதவி வகித்தார் சீதாராம் யெச்சூரி.
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஆனார். அப்போது முதல் மறையும் வரை தொடர்ந்து 3 முறையாக சிபிஐஎம் கட்ச்யின் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார் சீதாராம் யெச்சூரி. அவரது மறைவு சிபிஐம் கட்சியினரையும், இடதுசாரிகளையும், அரசியல் இயக்கத்தவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கி உள்ளனர். டெல்லியில் உள்ள சிபிஐஎம் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்குக் பிறகு, சீதாராம் யெச்சூரியின் உடல் அவரது விருப்பப்படி கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்துக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும்.
இறுதிக் காலத்தில் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பெற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கே அவரது உடல் தானமாக வழங்கப்பட்டு உள்ளது. இறுதிச் சடங்கு இன்றி, சீதாராம் யெச்சூரியின் உடல், அறிவியலுக்காக தானம் செய்யப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது என்பதை மறுக்க முடியாது.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications