பாலியல் சேட்டை.. விரட்டிய சிபிசிஐடி.. டேராடூனிலிருந்து தப்பியோடி, டெல்லியில் சிக்கிய சிவ சங்கர் பாபா
டெல்லி: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமியார் சிவசங்கர் பாபா டேராடூன் மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பி ஓடிய நிலையில், டெல்லியில் மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் சுமார் 64 ஏக்கரில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. தன்னை சாமியார் என்று அழைத்துக் கொண்ட இவரை நம்பி ஏராளமான சிஷ்யர்கள் உள்ளனர்.
இந்த நிலையில்தான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. சிவ சங்கர் பாபா அந்த பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவல்தான் அது.

பாலியல் புகார்
சிவ சங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்ததன் அடிப்படியில் மாமல்லபுரம் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம், சிவ சங்கர் உத்தரகாண்ட் மாநிலம் தப்பியோடிவிட்டதாக தகவல் கிடைத்தது. வெளி மாநிலங்களுக்கு போலீசார் செல்ல தேவையுள்ளதால் வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.

மருத்துவமனை
டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவ சங்கர் பாபா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலி இருப்பதாக கூறி இப்படி போய் அவர் அட்மிட் ஆகிவிட்டார். எனவே, அவரை பிடித்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேரடியாக டேராடூன் சென்று விட்டார்கள். ஆனால் இதை தெரிந்து கொண்டு அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

லுக் அவுட் நோட்டீஸ்
அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது .ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து நேபாளம் தப்பி செல்வதற்கு எளிதான வழி இருக்கிறது. எனவே அவர் நேபாளம் தப்பி செல்லாமல் இருப்பதற்காகவும், பிற மாநில எல்லையில் இருக்கக்கூடிய ஆசிரமங்களிலும் சிபிசிஐடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தப்பியோட்டம்
அந்தந்த மாநில போலீசாரின் உதவியோடு இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட் மாநிலத்திலும் டெல்லியிலும் ஆசிரமங்கள் பல இருக்கின்றன. அங்கு எங்காவது அவர் பதுங்கி இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்வதற்காக அந்த ஆசிரமங்களுக்கு சிபிசிஐடி போலீசார் விரைந்தனர். சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இப்படி பல வகைகளில் செக் வைக்கப்பட்ட நிலையில், டெல்லியில் சிவ சங்கர் பாபா சிக்கியுள்ளார். அங்கு அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இன்று மாலையே அல்லது நாளை காலை, அவர் சென்னை அழைத்து வரப்படுவார். இங்கு வைத்து விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications