Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து.. 6வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்! மத்திய அரசு மௌனம் கலையுமா?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: கடந்த 2019ம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தது. அதில் லடாக் யூனியன் பிரதேசமாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், மாநில அந்தஸ்து கோரி 6வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.

மாநில அந்தஸ்துடன், 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்பதும் இவரது கோரிக்கையாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 6வது அட்டவணை, சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. குறிப்பாக அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுயாட்சியை இந்த அட்டவணை வழங்குகிறது.

Ladakh

அதேபோல லடாக்குக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என சோனம் வாங்சுக் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் லடாக்கின் தனித்துவமான பழங்குடி கலாச்சாரம், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் வேலைவாய்ப்பு மீது உள்ளூர் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யு முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் பேசிய அவர், இது இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் கோரிக்கை அல்ல. இந்திய ஒன்றியத்திற்குள் அதிக சுயாட்சியையும், பாதுகாப்பையும் கோரும் ஒரு முயற்சி என்று விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும், 2020ம் ஆண்டும் லடாக் பகுதிக்கு இந்தச் சலுகைகளை வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதால், லடாக் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவேதான் உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஒருவேளை 6வது அட்டவணையில் லடாக்கை இணைக்கவில்லை எனில், பெரிய அளவிலான தொழில்துறை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்கள் லடாக்கில் திணிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இது லடாக்கின் நுட்பமான சூழல் அமைப்பைச் சேதப்படுத்துவதுடன், உள்ளூர் மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று சோனம் வாங்சுக் கூறுகிறார். முதன்முறையாக, பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கார்கில் மாவட்டங்கள் இந்தக் கோரிக்கை காரணமாக ஒன்று திரண்டுள்ளன.

ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கைகளுக்கு உறுதியாக மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லடாக் பிரதிநிதிகள் குழுவிடம், "பிரதமர் கேட்டாலும் நான் உங்கள் கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்" என்று கூறியதாகப் பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனாலும், வாய்ப்பில்லை என்று அரசு கைவிரித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+