சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை- டெல்லியை போர்க்களமாக்கிய காங்கிரஸ்- தொடர் போராட்டம்!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜராகி உள்ளார். சோனியா காந்திக்கு ஆதரவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகளை யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு. இவ்வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி இருந்தனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரான போது காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தினர். காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களால் டெல்லி போர்க்களமானது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டமும் நடத்தி இருந்தனர்.

சோனியாவிடம் விசாரணை
இந்நிலையில் இன்று சோனியா காந்தி, அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்றும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவதால் அதைத் தடுக்கவும் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் போலீஸ் குவிப்பு
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குள் ஊடகங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் மாநிலங்களிலும் சோனியாவுக்கு ஆதரவாக காங்கிரசார் இன்று சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்த உள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பொராட்டத்தில் பங்கேற்றார். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
இதனிடையே டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், சோனியாவிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸின் கூட்டணி கட்சி எம்.பிக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் பழிவாங்கும் போக்குக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
மேலும் சோனியாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கவே மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 14 கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications