பிளவுபடுத்துறத நிறுத்துங்க.. ஏற்றத்தாழ்வு வேண்டாம்! மத்திய அரசு மீது கொந்தளித்த “கோத்ரேஜ்” தலைவர்
டெல்லி: நாட்டை பிளவுபடுத்துவதுவதை நிறுத்திவிட்டு அரசு மக்களுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தியாவில் தொழிலதிபர்கள் பலரும் அரசியல், பொது விவகாரங்கள் தொடர்பாக வெளிப்படையான கருத்துக்களை சொல்வதை தவிர்த்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய அரசை விமர்சிப்பதை அவர்கள் நிறுத்திக் கொண்டனர்.
மறைந்த பஜாஜ் குழும தலைவர் ராகுல் பஜாஜ், கடந்த 2019 ஆம் ஆண்டு, பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சம் காரணமாக தொழிலதிபர்கள் பேசாமல் இருக்கின்றனர்." என்று கூறினார். அவரது இந்த கருத்தே அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நதிர் கோத்ரேஜ்
இந்த நிலையில் இந்தியாவின் பழமைவாய்ந்த முன்னனி நிறுவனமான கோத்ரேஜின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நதிர் கோத்ரேஜ் அரசு தொடர்பாக வெளிப்படையான கருத்தை பகிர்ந்து இருக்கிறார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த "பொருளாதாரத்திலும், கல்வி நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பிளவுபடுத்தல்
ஆனால், நாட்டை ஒற்றுமையாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்திவிட்டு ஒற்றுமை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கியம். அரசும் இதை அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்.

கருத்து சுதந்திரம்
நாங்கள் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறோம். தொழில் நிறுவனங்கள் பொருளாதார மேம்பாட்டில் முடிந்தவரை பங்களிக்கும். அதே நேரம் அரசும் அதிக பணிகளை செய்ய வேண்டும்." என்றார். முன்னதாக நிகழ்வில் பேசிய நதிர் கோத்ரேஜ், கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

பேச்சுரிமை
"அரசின் நீண்ட கரம், தங்களை எதிர்ப்பவர்களின் குரல்களை நசுக்குகிறது. சுறுசுறுப்பான விவாதங்கள் வளர்ச்சியடையும் இடத்தில்தான் யோசனைகள் வெற்றிபெறுகின்றன. இந்த யோசனைகள் வெற்றிபெறுவதற்கு காரணம் அவை சரியாக இருந்ததாலேயே தவிர கவுரவத்தால் அல்ல.

சமத்துவம் தேவை
நமக்கு வலுவான நிறுவனங்கள் தேவை. கோத்ரேஜ் நிறுவனம் தைரியமான உலகை விரும்புகிறது. அவை பசுமையாக, அழகாக, ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க விரும்புகிறோம்." என்றார். மத்திய மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக தனது கவலையை வெளிப்படுத்திய அவர், இலவசங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நகர்வை பாராட்டினார்.

அதிர் கோத்ரேஜ்
அரசாங்கம் பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கு அதிக நிதியை செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த 2019 ஆம் ஆண்டு நதிரின் மூத்த சகோதரர் அதிர் கோத்ரேஜும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார். "நாட்டின் அதிகரித்து வரும் சகிப்பின்மை, வெறுப்புணர்வு, அதனால் நிகழும் குற்றங்களால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி இருந்தார்."
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications