சி.பி.ஐ. இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்!
டெல்லி: சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றார். அதன்பின்னர் அந்த பதவி காலியாக இருந்து வந்தது. சி.பி.ஐ கூடுதல் இயக்குனர் பிரவீன் சின்ஹா கூடுதல் பொறுப்பாக இதனை கவனித்து வந்தார்.

இதற்கிடையே புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்காக விதிமுறைகளின்படி பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் ஒன்று கூடி நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1985ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த ஜெய்ஸ்வால் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications