தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரபர உத்தரவு
டெல்லி: தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைக் கூறி உள்ளது.
உலகெங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் புறக்கணித்து வைக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கள் உரிமைகளுக்காக தன்பால் ஈர்ப்பாளர்கள் தொடர்ந்து போராடி வேண்டிய சூழலே தான் இன்னும் உள்ளது.
காதலுக்கு எப்படி சாதி, மதம் இல்லையோ அதேபோல பாலினங்களும் இல்லை என்பது இவர்கள் வாதம். தன்பால் ஈர்ப்பாளர்களை தனியாக ஒதுக்கி வைப்பதே தவறு என்று கூறி தன்பால் ஈர்ப்பாளர்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர்.

தன்பால் ஈர்ப்பு
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு சீக்கிரமாகவே சட்டப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டன. உலகில் மிகப் பழமையான ஜனநாயகங்களில் ஒன்றான அமெரிக்காவில் கூட கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நாடு முழுக்க தன்பால் ஈர்ப்பாளர்ப்பு சட்டப்படி குற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் இந்தியாவில் கடந்த 2018 முதல் தன்பால் ஈர்ப்பு சட்டப்படி குற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இன்னும் கூட குழந்தைகளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட விஷயங்களில் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
இதற்கிடையே இரு தன்பால் ஈர்ப்பு ஆண்கள் தங்கள் திருணத்தைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான அங்கீகாரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்தைச் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது தொடர்பாகப் பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

உத்தரவு
மேலும், இந்த தன்பால் ஈர்ப்பார்கள் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய அட்டர்னி ஜெனரலும் பதிலளிக்குமாறு தனியாக மற்றொரு நோட்டீஸையும் அனுப்பியது. இதையடுத்து வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. தன்பால் ஈர்பாபளர்களின் திருமணத்தை அங்கீகரிக்காதது பாரபட்சம் என்று ஐதராபாத்தைச் சேர்ந்த தன்பால் ஈர்ப்பு ஜோடியான சுப்ரியோ சக்ரவர்த்தி மற்றும் அபய் டாங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அடிப்படை உரிமை மீறல்
அதேபோல இரண்டாவது மனுவை தன்பால் ஈர்ப்பாளர் தம்பதிகளான பார்த் ஃபிரோஸ் மெஹ்ரோத்ரா மற்றும் உதய் ராஜ் ஆகியோர் தாக்கல் செய்து இருந்தனர். LGBT பிரிவைச் சேர்ந்த நபர்களுக்குத் தாங்கள் விரும்பும் நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்த தம்பதிகள் தங்கள் மனுக்களில் குறிப்பிட்டனர். மேலும், தன்பால் ஈர்பபாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது, அரசியலமைப்பின் 14 மற்றும் 21ஆவது பிரிவின் கீழ் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

அனுமதிப்பதில்லை
இருப்பினும், இந்திய சட்டப்படி தன்பால் ஈர்ப்பாளர்கள் அவர்களுக்குப் பிடித்த நபரைத் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கவில்லை.. எனவே, நமது அரசியலமைப்பு சட்டம் தரும் உரிமையை நிலைநாட்டும் வகையில், தன்பால் ஈர்ப்பாளர்கள் விரும்பும் நபரைத் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தான், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

2018 தீர்ப்பு
கடந்த 2018ஆம் ஆண்டு செப். மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்த விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. 158 ஆண்டுகள் பழமையான காலனித்துவ காலச் சட்டமான ஐபிசி 377படி தன்பால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதை நீக்கிய அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை தாங்கிய அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "சாதாரண மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் எல்ஜிபிடி சமூகத்துக்கும் உள்ளன. தன்பால் ஈர்ப்பைக் குற்றமாக்குவது பகுத்தறிவற்றது மற்றும் பாதுகாப்பற்றது" என்று தீர்ப்பு அளித்தனர்.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications