காவிரி நதிநீர் வழக்கு: நீதிபதி பிஆர் கவாய் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட புதிய பெஞ்ச் அறிவிப்பு!
டெல்லி: காவிரி நதிநீர் வழக்கை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலஆன இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, பிகே மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கு வரும் 25-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகா 53 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 15 டிஎம்சி காவிரி நீர் மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் முறையிட்டனர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் 10,000 கன அடி நீரை மட்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. காவிரி நதிநீர் வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவில் பாஜக நேற்று போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாண்டியாவில் கர்நாடகா விவசாயிகளும் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது மைசூர்- பெங்களூர் சாலையில் மறியல் செய்யவும் கர்நாடகா விவசாயிகள் முயன்றனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் காவிரி நதிநீர் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் நீதிபதிகளை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. நீதிபதிகள் பிஆர் கவாய், பிஎஸ் நரசிம்மா மற்றும் பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய புதிய பெஞ்ச் உச்சநீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கை இந்த புதிய பெஞ்ச் வரும் 25-ந் தேதி விசாரிக்க இருக்கிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications