விஆர்எஸ் கொடுத்த மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்- ஆவணங்களை கேட்கும் சுப்ரீம்கோர்ட்
டெல்லி: விருப்ப ஓய்வு பெற்ற மறுநாலே தேர்தல் ஆணையரான அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக அருண் கோயல் பணியாற்றி வந்தார். 37 ஆண்டுகள் மத்திய அரசு பணியில் இருந்தார். கடந்த 18-ந் தேதியன்று தமது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் அருண் கோயல்.

அருண் கோபால் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே நாட்டின் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய சீர்திருத்தம் கோரிய வழக்கை நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விசாரித்து வருகிறது. அப்போது, அருண் கோயல் நியமன விவகாரமும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகியோர் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டதில் தவறு ஏதும் இல்லை என்றனர்.
ஆனால் நீதிபதிகளோ, தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையில் சுதந்திரமான நடைமுறை தேவை. கொலிஜியம் போல ஒரு முன்மாதிரியான தேர்வு குழுவை உருவாக்குவது தேவையாக உள்ளது என்றனர். அதுவும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் இத்தகைய நியமனங்கள் எப்படி சரியானது எனவும் நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.
அத்துடன் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் நியமிக்கப்பட்டது எப்படி? இது தொடர்பான நடைமுறைகள், ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர் நீதிபதிகள். தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications