3 வயது பிஞ்சை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி.. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி: குஜராத்தின் சூரத்தில் 3வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஒரு வாரமே உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் பீகாரைச் சேர்ந்த கொடூரன் அணில் சுரேந்தர் யாதவ் (வயது 60) என்பவன் பேத்தி வயது உடைய 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அணில் சுரேந்தர் யாதவ்வை அம்மாநில போலீசார் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் குற்றவாளி அணில் சுரேந்தர் யாதவ்வை சாகும் வரை தூக்கிலட வேண்டும் என்று மரண தண்டனை விதித்தது. இவரின் மரண தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் டிசம்பர் 27 அன்று உறுதி செய்தது.
இந்நிலையில் அணில் சுரேந்தர் யாதவ்க்கு வரும் பிப்ரவரி 29ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து வந்தது. தண்டனையை நிறைவேற்ற ஒரு வாரமே உள்ள நிலையில், அனில் சுரேந்திர யாதவ் உச்சநீதிமன்றத்தில் தூக்கிலிடப்படுவதை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபராஜிதா சிங் வாதிடுகையில், அனைத்து சட்ட தீர்வுகளும் தீர்ந்துபோகும் முன் டெத் வாரணட் ( மரண உத்தரவு) பிறப்பிக்க முடியாது என்று வாதிட்டார்.
யாதவ் தனது மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 60 நாட்கள் உள்ளன, அதற்கு முன் டெத் வாரண்ட் பிறப்பிக்க முடியாது என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
வாதங்களை கேட்டபின், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, "அனைத்து சட்ட தீர்வுகளும் தீர்ந்துபோகும் முன் டத் வாரண்ட் பிறப்பிக்க முடியாது என்று கூறியதுடன், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, ஒரு நீதிபதி எவ்வாறு அத்தகைய உத்தரவுகளை அனுப்ப முடியும்? இதுபோன்ற நீதித்துறை செயல்முறைகளை ஏற்க முடியாது என்றார். அத்துடன் அத்துடன் பிப்ரவரி 29ம் தேதி தண்டனைய நிறைவேற்றக்கூடாது என்றும் தடை விதித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications