ஆவணமில்லாமல் ரூ2,000 நோட்டு மாற்றம்- அவரச வழக்காக உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளில் ரூ2,000 நோட்டு மாற்ற அனுமதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.
ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த ஒரு ஆவணமும் தேவை இல்லை என்பதும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் ரூ.2,000 நோட்டு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் ஆய்வு செய்யக் கூடிய மேல்முறையீட்டு ஆணையம் அல்ல நீதிமன்றம் என கூறி அஸ்வினிகுமார் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

இதனைத் தொடர்ந்து அஸ்வினி குமார் உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனு, நீதிபதிகள் சுதான்ஷூ துலியா, விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தின் அனிருதா போஸ், ராஜேஷ் பிண்டல் பெஞ்ச் முன்பாக மீண்டும் அஸ்வினி உபாத்யாய ஆஜராகி தமது மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினார். அப்போது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஏற்கனவே ஒரு பெஞ்ச்சில் தாக்கல் செய்த மனுவை மீண்டும் ஏன் இப்போது கொண்டு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அஸ்வினி குமார் உபாத்யாய, ரூ. 2,000 நோட்டுகளை மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள் தடையின்றி மாற்றி வருகின்றனர். இதுவரை ரூ. 80,000 கோடி அளவுக்கு ரூ. 2,000 நோட்டுகள் மாற்றப்பட்டுவிட்டன. ஆகையால்தான் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார். இதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications