உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு தொடக்கம்- சரித்திரத்தில் முதல் முறை!
டெல்லி: இந்திய சரித்திரத்தின் வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நடத்துகிற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணைகள் இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என 2018-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் 27-ந் தேதி, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இதற்கு அனுமதி கொடுத்தது. உச்சநீதிமன்ற விசாரணைகளை லைவ்வாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் என்.வி.ரமணா, அண்மையில் பணி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நாளில் நடத்திய வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரசியல் சாசன் பெஞ்ச் முன்பான நடைபெறும் விசாரணைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்சநீதிமன்ற இணையதளத்தில் இந்த நேரலையை பார்க்க முடியும்.

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக சிவசேனா தொடர்பான வழக்கு, முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு உள்ளிட்டவை விசாரிக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் இந்த வழக்கு விசாரணைகளை நடைபெறுகிறது. முதலில் 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.
உச்சநீதிமன்ற விசாரணைகள் லைவ் ஒளிபரப்பு: https://webcast.gov.in/scindia/live1/












Click it and Unblock the Notifications