Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானி விவகாரம்.. முழு வெளிப்படைத்தன்மை தேவை.. மத்திய அரசு யோசனையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

அதானி குழும மோசடிகள் தொடர்பான வழக்குகள் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானி குழும மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று அதானி குழும மோசடிகள் தொடர்பான வழக்கில் குழு அமைப்பது தொடர்பாக உத்தரவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Supreme Court to hear PILs on Adani-Hindenburg report today

அதானி குழுமம் பங்கு சந்தையில் எப்படி எல்லாம் மோசடி செய்தது என்பதை அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை அம்பலப்படுத்தியது. உலகம் முழுவதும் அதானி குழும விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமம் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் மதிப்புகள் வீழ்ச்சியடைந்தன. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி கிடுகிடுவென வீழ்ச்சியை சந்தித்தார்.இதனால் அதானி குழுமம் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் மதிப்புகள் வீழ்ச்சியடைந்தன. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி கிடுகிடுவென வீழ்ச்சியை சந்தித்தார்.

அத்துடன் அதானி குழும மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து மத்திய அரசுக்கும் பங்கு சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் செபி அமைப்பும் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அதானி குழும மோசடிகள் குறித்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்திருந்தது செபி.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்கூர் திடீரென உச்சநீதிமன்றத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக விசாரிக்க கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட், நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முகேஷ் குமார் என்பவர், அதானி குழுமத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அதானியின் பங்கு சந்தை மோசடி குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று முகேஷ் குமார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக தொடரப்பட்ட 4-வது வழக்கு இது. அதானி குழுமத்துக்கு எதிரான முகேஷ்குமார் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் பதூரியா ஆஜராக உள்ளார். இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.

Supreme Court to hear PILs on Adani-Hindenburg report today

அப்போது சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யத் தயார் என்ற மத்திய அரசு கூறிய நிலையில், மத்திய அரசின் யோசனையை தலைமை நீதிபதி நிராகரித்தார். இவ்விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையை உச்ச நீதிமன்றம் விரும்புகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மேலும் நிபுணர் குழுவின் பெயர்களை சுப்ரீம் கோர்டே பரிந்துரைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் அமைக்கும் வல்லுநர் குழுவுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+