மகளுக்கு மகுடம் சூட்டிய சரத் பவார்: தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவராக சுப்ரியா சுலே நியமனம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக அக்கட்சியின் தலைவரான சரத்பவார் மகளும் எம்பியுமான சுப்ரியே சுலே-வை நியமித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியானது மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி அரசை பாஜக கவிழ்த்து புதிய ஆட்சி அமைத்தது. சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய ஆட்சியை அமைத்தது பாஜக.

 Supriya Sule, Praful Patel appointed NCP working presidents

இருந்த போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சரத்பவாரின் அண்ணன் மகன், அஜித் பவார் எந்த நேரத்திலும் போர்க்கொடி தூக்கி பாஜக பக்கம் சாய்வார் என்கிற யூகங்கள் அவ்வப்போது எழுகிறது. இதன் உச்சமாகத்தான் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் சரத்பவார் அறிவித்தார். பின்னர் தமது முடிவை சரத்பவார் வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25-வது ஆணடு தொடக்க நாள் டெல்லியில் நடைபெற்றது. கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு சரத்பவார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர்களாக மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே மற்றும் தேசியவாத காங்கிரஸின் அகில இந்திய துணைத் தலைவரான பிரபுல் பட்டேல் ஆகியயோரை சரத்பவார் நியமித்துள்ளார். இந்த அறிவிப்பின் போது அஜித்பவாரும் உடனிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+