அராஜகம்.. இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைந்து சூறை.. முக்கிய டாக்குமென்ட்களுடன் பறந்த தாலிபன்கள்
தாலிபன்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை சூறையாடி உள்ளனர்
டெல்லி: ஆப்கானில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தை தலிபான்கள் அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்து முக்கியமான டாக்குமென்ட்களையும் எடுத்து சென்றுவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.
Recommended Video
ஆப்கான் விவகாரத்தை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது.. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்...
இந்த விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது.

பெண்கள்
பெண்கள் பலவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பயந்து, அந்த நாட்டில் இருந்து தப்பித்து ஓடவும் வழிவகுத்து விட்டது... "யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான நல்ல ஆட்சியை தருவோம்" என்று தாலிபன்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை.. நாளுக்கு நாள் திடீர் திடீர் திருப்பங்கள் அங்கு நடந்து வருகின்றன.. பெண்களுக்கான தாக்குதல்கள் அதிகமாகி வரும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பு குறித்த பீதியும் ஏற்பட்டுள்ளது.

காபூல்
ஆப்கன் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் உள்ளது... இந்த இந்திய தூதரகத்தில் ஒருசில அதிகாரிகள் மட்டுமே இருக்கும்நிலையில், அவர்களையும் இந்தியா அழைத்து கொண்டு வர எல்லாவிதமான முயற்சிகளும் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தலிபான்கள் திடீரென கந்த்ஹருக்கு சென்று இந்திய துணை தூதரகத்தின் அலுவலகத்திற்கு வந்தனர்..

சூறை
அந்த ஆபீஸ் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை மொத்தமாக சூறையாடினர்.. மேலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த முக்கியமான டாக்குமெண்ட்களை எடுத்து கொண்டனர்.. அத்துடன், ஆபீசுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளையும் எடுத்து சென்றுள்ளனர். இதுதான் பரபரப்பை கிளப்பி உள்ளது.

படை
அங்குமட்டுமல்ல, கந்த் ஹர், ஹீரட் போன்ற இடங்களில் 4 துணை துாதரகங்களும் செயல்பட்டு வருகின்றன.. இதில் ஹீரட், மசாரே ஷெரிப்-ல் உள்ள துணை தூதரகங்களையும் வேவு பார்த்தார்களாம்.. ஏற்கனவே, பெண்களுக்கான பாதுகாப்பு ஒருபக்கம் இருந்தாலும், வீடு வீடாக சென்று அமெரிக்க படைக்கு ஆதரவாக யார் யார் வேலை பார்த்தார்கள் என்று விசாரித்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்திய தூதரகங்களை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications