Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தம் 10 பேர்.. பரபரத்த 60 மணி நேர ஐடி ரெய்டு.. இந்திய ஊழியர்களுக்கு பிபிசியின் மேஜர் தகவல் இதுதான்

வருமான வரித்துறையினர் நடத்திய 60 மணி ரெய்டு முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பான அறிக்கை இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 14ம் தேதி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு 60 நேரத்திற்கு பின்னர் ஒருவழியாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பிபிசி தனது ஊழியர்களுக்கு முக்கிய செய்தியை அனுப்பியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரிட்டனின் வெளியுறவுத்துறை ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி India: The Modi Question எனும் ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. ஆனால் இப்படடித்திற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் புகழை கெடுக்கும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியது.

இதனையடுத்து இப்படத்தை தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ன் கீழ் தடை செய்தும் உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இருப்பினும் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற தளங்களிலிருந்து இப்படம் நீக்கப்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் இப்படத்தை திரையிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. கேரளாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மாணவர்களால் படம் திரையிடப்பட்டது.

 ஆவணப்படம்

ஆவணப்படம்

கேரளாவில் பொதுவெளியில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் போட்டிப்போட்டுக்கொண்டு இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். இது ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க மறுபுறம் டெல்லி மற்றும் மும்பையில் இருந்த பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 'சர்வே' எனப்படும் ரெய்டை மேற்கொண்டனர். ஏற்கெனவே இந்த ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ரெய்டு நடத்தியிருப்பது எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த ரெய்டுக்கு முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 ரெய்டு

ரெய்டு

காங்கிரஸ், ஆம் ஆத்மியும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தது. ரெய்டு காரணமாக பிபிசி அலுவலகத்தில் சுமார் 10 ஊழியர்கள் 60 மணி நேரமாக தங்கியிருந்தனர். விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், கம்யூட்டரிலிருந்து செல்போன் வரை அனைத்தையும் அவர்கள் அணுக அனுமதிக்க வேண்டும் என பிபிசி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரெய்டு நேற்று இரவு சுமார் 11 மணியளவில் முடிவுக்கு வந்தது. ரெய்டில் ஊழியர்கள் முழுமையான ஒத்துழைப்பை கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

 இரண்டாவது மெமோ

இரண்டாவது மெமோ

இந்நிலையில் பிபிசி தனது ஊழியர்களுக்கு ஒரு தகவலை அனுப்பியுள்ளது. அதாவது, "இந்த சம்பவங்கள் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் அழுத்தத்தையும், வருதத்தையும் தரும் அனுபவமாக தொடர்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம். ரெய்டு முடிந்த பின்னர் தொடர்புகொள்கிறோம். அதேபோல ஊழியர்கள் சோஷியல் மீடியாவிலிருந்து விலகி இருப்பதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில் இதில் ரெய்டு குறித்து உண்மைக்கு மாறான செய்திகள் பல வலம் வருகின்றன. எனவே இந்த தவறான செய்தியின்பால் தூண்டப்பட்டு புகார் ஏதும் அளிக்கக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 துணையாக இருக்கிறோம்

துணையாக இருக்கிறோம்

நாங்கள் ஊழியர்களான உங்களுக்கு முழு ஆதரவை அளிக்கிறோம். உங்களில் சிலர் நீண்ட கேள்வியை எதிர்கொண்டுள்ளனர். சிலர் இரவு முழுவதும் அலுவலகத்திலேயே தங்க வைக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளது. எனவே இந்தியாவிலும், அதற்கு அப்பாலும் உள்ள மக்களுக்கு சேவை செய்ய தயராக இருப்போம். பிபிசி ஒரு நம்பகமான சுதந்திரமான ஊடக அமைப்பு. மேற்குறிப்பிட்டதைப்போல நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு முற்றிலும் துணையாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+