காஷ்மீரை 3 குடும்பங்கள் கொள்ளையடித்தது.. அதை முடிவிற்கு கொண்டு வந்துள்ளோம்.. அமித் ஷா பொளேர்!

370-வது பிரிவு தரும் சிறப்பு அந்தஸ்து மூலம் 3 குடும்பங்கள்தான் ஜம்மு காஷ்மீரில் கொள்ளையடித்து வருகின்றன, அதை தற்போது முடிவிற்கு கொண்டு வந்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    டெல்லி: 370-வது பிரிவு தரும் சிறப்பு அந்தஸ்து மூலம் 3 குடும்பங்கள்தான் ஜம்மு காஷ்மீரில் கொள்ளையடித்து வருகின்றன, அதை தற்போது முடிவிற்கு கொண்டு வந்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை வெளியிட்டு பேசிய அவர் காஷ்மீரில் இத்தனை வருடங்கள் நடந்த அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்

    என்ன பேச்சு

    என்ன பேச்சு

    சட்டப்பிரிவு 370ஐ நீக்கிவிட்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்போது காஷ்மீரில் சட்டசபை இல்லை. அங்கு ஆட்சி கவிழ்ந்துவிட்டது. அதனால் சட்டப்பிரிவு 370ஐ நாடாளுமன்றத்தில்தான் நீக்க வேண்டும். இரண்டு அவைகளிலும் மெஜாரிட்டி வாக்குகள் மூலம் இந்த சட்டத்தை நீக்க வேண்டும்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    ஜம்மு காஷ்மீர் இத்தனை வருடங்களாக எந்த விதமான பலனும் பெறாமல் இருந்தது. அங்கு ஊழல் வளருவதற்கு அரசியல்வாதிகள் உதவிகொண்டு இருந்தனர். சட்டப்பிரிவு 370 காஷ்மீருக்கு எதிராக இருந்தது. அந்த மாநிலத்தை வளர விடாமல் தடுத்தது.

    ஏன்

    ஏன்

    370 சட்டப்பிரிவு ஒருங்கிணைந்த இந்தியா என்ற கொள்கைக்கு எதிராக இருந்தது. இதனால் இன்று அதை நீக்க முடிவு செய்து இருக்கிறோம். லடாக் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தற்போது நிறைவேற்றி இருக்கிறோம்.இதற்கு முன்பே 1952, 1962ல் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

    வாருங்கள்

    வாருங்கள்

    அதனால் சபையில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விவாதிக்க வாருங்கள். எம்.பிக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் தர தயாராக இருக்கிறோம். 370-வது பிரிவு தரும் சிறப்பு அந்தஸ்து மூலம் 3 குடும்பங்கள்தான் கொள்ளையடித்து வருகின்றன. அது இனி நடக்காது. அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+