அமித் ஷாவின் சாமர்த்தியம்.. ஆர்டிஐ மசோதா ராஜ்யசாபாவிலும் நிறைவேற்றம்.. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி
டெல்லி: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேறிவிட்டதால் இந்த சட்டம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அவரது ஒப்புதலுக்கு பின் அமலுக்கு வரும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி மத்திய மாநில தகவல் ஆணையர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைந்துள்ளது. மேலும் ஊதியம் உள்ளிட்ட விவகாரங்கள் என தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான அதிகாரங்கள் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்த ஆர்டிஐ மசோதாவை லோக்சபாவில் தனிப்பெரும்பான்மை இருந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எளிதில் நிறைவேற்றியது.

சம்மதித்த கேசிஆர்
இந்நிலையில் ராஜ்யசபாவில் ஆர்டிஐ மசோதாவை நிறைவேற்ற போதிய பலம் பாஜக கூட்டணிக்கு இல்லை. இதையடுத்து இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தருமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்விடம் கேட்டார் . இதையடுத்து அவரது கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆதரவு அளித்தது.

கேசிஆர், ஜெகன் ஆதரவு
இதேபோல் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவையும் ஆதரவு அளித்தன. இதன் காரணமாக ராஜ்யசபாவில் ஆர்டிஐ மசோதா நிறைவேறி உள்ளது.

ராஜ்யசபாவில் நிறைவேறியது
ராஜ்யசபாவில் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவை தேவை என்ற நிலையில் பிஜூ ஜனதா தளம், பிடிபி, டி.ஆர்.எஸ். மற்றும் ஒய்.எஸ். ஆர். கட்சிகள் ஆதரவு அளித்ததால் ஆர்டிஐ மசோதாவுக்கு ஆதரவு எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக ஆர்டிஐ மசோதா ராஜ்யசாவில் எளிதாக நிறைவேறியுள்ளது.

அமித்ஷா சாமர்த்தியம்
இந்நிலையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்ச எம்பிக்கள் இந்த மசோதா நிறைவேறும் போது வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவை நிறைவேற எதிர்க்கட்சிளின் ஆதரவை மிக சாமார்த்தியமாக அமித் ஷா திரட்டியதே காரணம் என்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications