நாளைக்கே சீனாக்காரன் நம்ம கூட சண்டைக்கு வந்தா என்ன பண்ணலாம்.. நிபுணர்கள் முன்வைக்கும் யோசனை!
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வரும் 2020-க்குள் போர் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 1962-ஆம் ஆண்டு சீனா- இந்தியாவுக்கு இடையே போர் நடைபெற்றது. அப்போது சீனா, லடாக் மற்றும் மக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து வந்து தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த டோக்லாம் பகுதியானது பூடானுக்கு சொந்தமானது. எனினும் அது எல்லை பகுதி என்பதால் இந்தியா பாதுகாத்து வருகிறது. இந்த டோக்லாமை கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்பதால் அதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியுள்ளது.

போர் பதற்றம்
இந்த நேரத்தில் சீன படைகள் திரும்ப செல்லாததால் இந்தியா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு சீன படைகள் டோக்லாம் பகுதியிலிருந்து வெளியேறியதால் போர் பதற்றம் தணிந்தது.

போர் வாய்ப்புகள்
இந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் 2012-ஆம் ஆண்டு போர் வரும் என தெரிவித்தனர். பின்னர் பீஜிங் ஒலிம்பிற்கு பிறகு போர் வரும் என்றார்கள். ஆனால் தற்போது அந்த நிபுணர்களே வரும் 2020-இல் போர் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்தனர்.

தோல்வி
தற்போது சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளுள் இந்தியாவும், சீனாவும் முக்கியமானதாகும். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் வந்தாலும் அவை கடந்த 5-ஆம் நூற்றாண்டுகளில் ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா இடையே வந்த போரை போல் வெற்றி தோல்வி இன்றி முடியும்.

வடகிழக்கு
அவ்வாறு போர் வந்தால் ஏராளமான பொருட்சேதத்தை கொடுக்கும், ஏராளமானோர் காயமடையும் சூழலும் ஏற்படும் என இந்திய வல்லுனர்கள் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட எல்லை பிரச்சினை எழலாம். இந்தியாவின் எல்லை வடமேற்கில் அதன் வடகிழக்கு வரை ஒரு வளைவாக செல்கிறது.

தீர்த்துக் கொள்ள வேண்டும்
இதனால் எல்லை எங்குள்ளது என தெரியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்னர் மக்மோகன் எல்லைக்கோடு உருவாக்கப்பட்ட போதிலும் எல்லை என்பது தெளிவாகவில்லை. இது போன்ற பிரச்சினைகளை போர் மூலம் தீர்த்து கொள்ளாமல் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வதே சரியானதாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications