Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிர்ச்சியில் மம்தா.. புறக்கணித்த திரிணாமூல்! மீறிய எம்பிக்கள் - துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று காலை தொடங்கிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடைந்து இருக்கும் நிலையில் 2 திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் கட்சி உத்தரவை மீறி தேர்தலில் வாக்களித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

    கொடநாடு வழக்கு: EPSஐ கவிழ்க்கும் OPS?|

    இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த மாதம் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலமும் முடிவடைய இருப்பதால் இன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    கட்சிகள் ஆலோசனை

    கட்சிகள் ஆலோசனை

    ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

    வேட்பாளர்கள்

    வேட்பாளர்கள்

    பாஜக சார்பில் வெங்கய்யா நாயுடு அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார்.

    வாக்குப்பதிவு

    வாக்குப்பதிவு

    டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையிலிருந்தே வாக்குகளை செலுத்தினர். 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    திரிணாமூல் காங்கிரஸ்

    திரிணாமூல் காங்கிரஸ்

    குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை முன்னெடுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் புறக்கணித்த அக்கட்சி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தது. இந்த நிலையில் கட்சி உத்தரவையும் மீறி 2 திரிணாமூல் எம்பிக்கள் இந்த தேர்தலில் வாக்களித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+