எல்.முருகனின் தமிழ் புத்தாண்டு விருந்து.. பங்கேற்ற மோடி! அழைத்தும் தவிர்த்த அண்ணாமலை -இதான் மேட்டரா?
டெல்லி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் தனது வீட்டில் சிறப்பு விழா நடத்தும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்களுக்கு விருந்து வழங்கும் நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதை தவிர்த்து சென்னைக்கு வந்து இருக்கிறார். இதற்கான பின்னணி காரணம் என்னவென்று பார்ப்போம்.
சித்திரை தமிழ் புத்தாண்டு இன்று உலக தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாடி தலைவர்களுக்கு சிறப்பு விருந்து வழங்க இருக்கிறார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வி.வி.ஐ.பி.க்கள் என பலரையும் எல்.முருகன் அழைத்து இருக்கிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக டெல்லியில் தங்கி இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும் தமிழ்நாடு பாஜக முக்கிய நிர்வாகிகளையும் அவர் அழைத்து உள்ளார்.
இந்த நிலையில், இன்று மாலை டெல்லியில் உள்ள எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா வெகு விமரிசையாக தொடங்கியது. விநாயகர் ஆராத்தியுடன் தொடங்கிய இந்த விழாவில், தமிழ் கலைகளை பறைசாற்றும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான தமிழ் மக்கள், பாஜகவினர் பலர் பங்கேற்று இருக்கிறார்கள்.

அதேபோல் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசனும் இந்த விழாவில் பங்கேற்று உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வது கடைசி வரை இறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், எல்.முருகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர் விழாவில் கலந்துகொண்டு தமிழின் சிறப்புகள் குறித்து உரையாற்றி உள்ளார். இதனை தொடர்ந்து எல்.முருகன் வீட்டில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

ஆனால், எல்.முருகன் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தும் இந்த தமிழ் புத்தாண்டு விழாவிலும், விருந்து நிகழ்ச்சியிலும் அண்ணாமலை பங்கேற்காமல் தவிர்த்து உள்ளார். திமுகவின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அண்ணாமலை அறிவித்து இருக்கும் நிலையில், எல்.முருகனிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டு தன்னால் வர இயலாது என்று சொல்லி அவர் சென்னைக்கு வந்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
இப்படி பண்ணா போதும்.. வங்கி கணக்கில் பணம் தேடி வரும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications