மோடியுடன் முக்கிய கட்சியின் 3 தமிழக எம்.பிக்கள் சந்திப்பா? பரபரக்கும் டெல்லி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய கட்சியின் 3 எம்.பிக்கள் அடுத்தடுத்து ரகசியமாக சந்தித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின்னர் பல மாநிலங்களில் அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றுகிறது பாஜக. ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த தடாலடியிலும் பாஜக இறங்கவில்லை.

ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் பலத்தை அதிகரிக்க திடீர் நடவடிக்கையை பாஜக மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் முக்கிய கட்சி ஒன்றின் 3 எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
இச்சந்திப்பு விவகாரங்கள்தான் டெல்லியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. தமிழக எம்.பி.க்கள் துறைசார்ந்த கோரிக்கைகளுக்காக அமைச்சர்களை சந்தித்து மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியை ரகசியமாக எம்.பிக்கள் சந்தித்து பேசியிருப்பது ஏன் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கூறப்படுகின்றன.












Click it and Unblock the Notifications