இந்திய ட்விட்டர் பொதுக் கொள்கை பெண் இயக்குனர் ராஜினாமா...காரணம் இது தானா ?
டெல்லி : இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான ட்விட்டர் பொதுக் கொள்கைக்கான பிரிவு இயக்குனர் மகிமா கவுல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரை பொறுத்தவரை உலக அளவில் அமெரிக்கா, ஜப்பானிற்கு அடுத்தப்படியாக 3 வதாக இந்தியாவில் தான் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். முன்னணி நடிகர் - நடிகைகள், விளையாட்டுத்துறை பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான இந்தியர்கள் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு ஹாஷ்டாக்கள், சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட 250 ட்விட்டர் கணக்குகளை நீக்கும்படி மிக கடுமையாக எச்சரித்து, கடந்த வாரம் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு சர்ச்சை கருத்துக்கள் ட்வீட் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்டு வருவதாக அரசு குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில் இந்தியாவிற்கான ட்விட்டர் பொதுக்கொள்கை பிரிவு பெண் இயக்குனவர் மகிமா கவுல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனவரி மாதமே ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தாலும், மார்ச் மாத இறுதி வரை அவர் பதவியில் தொடருவார் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி ட்விட்டர் துணை தலைவர் மொனிக் மிசி கூறுகையில், இந்த ஆண்டு துவக்கத்திலேயே தனது ட்விட்டர் பொது கொள்கை இயக்குனர் பதவியை ராஜினாமா செய்ய மகிமா முடிவு செய்தார். இது ட்விட்டருக்கும் எங்களுக்கும் பெரிய இழப்பு. இருந்தாலும் 5 ஆண்டுகளுக்க மேல் இப்பணியில் இருக்கும் அவரது முடிவை மதிக்கிறோம். உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் கவனம் செலுத்த போவதாக முடிவு செய்துள்ளார். மகிமா மார்ச் இறுதி வரை தனது பதவியில் தொடர்வார். தொடர்ந்து எங்களுக்கு தனது பங்களிப்பை அளிப்பார் என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications