மத்திய அரசு சம்பாதிப்பது எப்படி? ஒரு ரூபாயில் வரவு - செலவு என்ன? இதோ பட்ஜெட்டின் முழு விபரம்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசு எப்படி ஒரு ரூபாயை சம்பாதித்து எப்படி செலவு செய்கிறது? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசின் ஒரு ரூபாயில் வரவு - செலவு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய ஆட்சியின் முதல் பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மேலும் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் எப்படி கிடைக்கிறது? அந்த ஒரு ரூபாயை மத்திய அரசு எப்படியெல்லாம் பிரித்து செலவு செய்கிறது? என்பது பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு ரூபாயில் மத்திய அரசுக்கு வரவாக கடன் உள்ளிட்ட வருவாய் மூலம் 27 பைசா வருகிறது. அடுத்ததாக வருமான வரியாக 19 பைசா, சரக்கு மற்றும் சேவை வரியாக 18 பைசா, நிறுவன வரியாக 17 பைசா, வரி அல்லாத வருவாய் ரசீது வகையில் 9 பைசா, கலால் வரியாக 5 பைசா, சுங்க வரியாக 4 பைசா, கடன் அல்லாத மூலதன ரசீது வழியாக 1 பைசா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு ரூபாயில் மத்திய அரசின் செலவை எடுத்து கொண்டால் அதிகபட்சமாக மாநில வரி பங்கீட்டுக்கு 21 பைசாவும், வட்டிக்கு 19 பைசாவும் செலவாகிறது. இததவிர மத்திய துறை திட்டங்களுக்கு 16 பைசா, மத்திய அரசு ஆதரவு திட்டங்கள், பாதுகாப்பு துறை திட்டங்களுக்கு தலா 8 பைசா, மானியங்களுக்கு 6 பைசா, ஓய்வூதியங்களுக்கு 4 பைசா, நிதிக்குழு செலவினங்கள், மற்ற செலவினங்களுக்கு தலா 9 பைசா செலவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications