பெரும் எதிர்பார்ப்பு-நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் ஜன.31-ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடக்கம்!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் 2025-26-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 31-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி உரை நிகழ்த்திய பின்னர் அரை மணிநேரம் கழித்து ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடங்கும். பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் 2025-26-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 13-ந் தேதி வரை ஒரு கட்டமாகவும் 2-வது கட்டமானது மார்ச் 10-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரையும் நடைபெறும்.
முன்னதாக ஜனவரி 30-ந் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கடந்த 23-ந் தேதி அல்வா கிண்டும் நிகழ்வுடன் மத்திய பட்ஜெட் தயாரிப்பு நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். மத்திய பட்ஜெட் 2025-26-ஐ பிப்ரவரி 1-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications