பிரதமரின் பள்ளிகள் திட்டம்.. 14 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்த அமைச்சரவை ஒப்புதல்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!
டெல்லி: நாடு முழுவதும் 14 ஆயிரம் பள்ளிகளை பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் நவீன முறையில் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று முன் தினம் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல் ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

பிரதமர் மோடி அறிவிப்பு
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் விளைவாக இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.

நவீனபடுத்தப்படும் பள்ளிகள்
இதன் மூலம் பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்படும். கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழிற்நுட்பம், நவீன வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்.

தேசிய கல்விக் கொள்கை
அண்மை காலங்களில் தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வித்துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் பயனடைவார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

அமைச்சரவை ஒப்புதல்
இந்த நிலையில் நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை ரூ.27,360 கோடி செலவில் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்தனர்.

மத்திய அரசின் பங்கு எவ்வளவு?
5 ஆண்டுகளுக்கு மொத்த திட்டத்தின் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும் எனவும், அதில் மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டில் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்துவதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதேபோல் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே, இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications